Showing posts with label poem. Show all posts
Showing posts with label poem. Show all posts

Friday, August 12, 2011

செம்மொழி






இங்கே நான் ரசித்த ஒரு கவிதையை தந்திருக்கிறேன் ... நீங்களும் ரசியுங்கள்...!!!




 





                    -அன்பு




 





தடுக்கி விழுந்தால்
மட்டும் ......
சிரிக்கும்போது
மட்டும் ....
சூடு பட்டால்
மட்டும் .....
அதட்டும்போது
மட்டும் .....
ஐயத்தின்போது
மட்டும் ...
ஆச்சரியத்தின்போது
மட்டும் ......
வக்கணையின் போது
மட்டும் ...
விக்கலின்போது
மட்டும் .....
என்று தமிழ் பேசி
மற்ற நேரம்
வேற்று மொழி பேசும் 
தமிழரிடம்
மறக்காமல் சொல்
உன் மொழி
செம்மொழியென்று !!!